மின்தடை புகார்களுக்கு 77 புதிய உதவி எண்கள் – TNPDCL அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் அண்மைக்காலமாக பல பகுதிகளில் அடிக்கடி மின்தடை மற்றும் நீண்ட நேர மின் விநியோக பாதிப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், பொதுமக்களின் புகார்களை விரைவாக தீர்க்கும் நோக்கில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை தொடர்பான புகார்களை உடனுக்குடன் கையாள 77 புதிய “Fuse-Off Call” (FOC) உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய சேவை மூலம் மின்கம்பம், டிரான்ஸ்பார்மர், கேபிள் பழுது உள்ளிட்ட கோளாறுகளை விரைவாக சரிசெய்ய சிறப்பு குழுக்கள் செயல்படவுள்ளன. முன்னதாக பொதுமக்கள் மின்தடை புகார்களுக்கு மின்னகம் (Minnagam) 94987 94987 என்ற மையப்படுத்தப்பட்ட உதவி எண்ணை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் அதிகளவிலான அழைப்புகள் காரணமாக பலர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதை கருத்தில் கொண்டு பழைய Fuse-Off Call சேவை மீண்டும் செயல்படுத்தப்பட்டு கூடுதலாக 77 புதிய உதவி எண்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு Fuse-Off Call குழுவிலும் நான்கு பணியாளர்கள் மற்றும் தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்...